25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது, ஒரு வாரத்திற்கு முன்பும், ஒரு வாரத்திற்கு பின்பும் மற்ற படங்களை வெளியிட அதன் தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். தியேட்டர்கள் கிடைக்காமல் போவதே இதற்குக் காரணம். கடந்த வாரம் 5ம் தேதி விஜய் நடித்த 'தி கோட்' படம் தமிழக தியேட்டர்களை பெருவாரியாக ஆக்கிரமித்தது. இந்த வாரம் வரையிலும் அந்தப் படம் தாக்குப் பிடித்து ஓட வாய்ப்புள்ளது. அதனால், மற்ற படங்களை வெளியிட தியேட்டர்கள் நிச்சயம் கிடைக்காது. அதனால், இந்த வார வெள்ளிக்கிழமையான நாளை (செப்டம்பர் 13ம் தேதி) ஒரே ஒரு படம்தான் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விவேக் குமார் இயக்கத்தில், ஜாக்கி ஷெராப், பிரியாமணி, சன்னி லியோன் மற்றும் பலர் நடித்த 'கொட்டேஷன் கேங்' படத்தின் முதல் பாகம் நாளை வெளியாகிறது. இந்தப் படத்தை ஆகஸ்ட் 30ம் தேதி வெளியிடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால், அப்போது இப்படம் வெளியாகவில்லை. நாளைய வெளியீட்டிற்கான முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது.
அதே சமயம், அடுத்த வாரம் செப்டம்பர் 20ம் தேதி நான்கைந்து படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.