கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
மலையாள நடிகரான விநாயகன், தமிழில் திமிரு, சிலம்பாட்டம், எல்லாம் அவன் செயல், மரியான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி நடித்த ‛ஜெயிலர்' படத்தில் வர்மன் என்ற வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். மேலும் சினிமாவில் வில்லனாக நடித்து வரும் விநாயகன் திரைக்குப் பின்னாலும் தனது வில்லத்தனத்தை அவ்வப்போது காண்பித்து சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டு வருகிறார்.
ஏற்கனவே போலீசாரை மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட விநாயகன், நேற்று கொச்சியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அங்கிருந்து கோவாவிற்கு சென்றவர், ஹைதராபாத்தில் உள்ள சம்சதாபாத் விமான நிலையத்தில் இறங்கி இருக்கிறார். அப்போது மது போதையில் இருந்த விநாயகன் அங்கிருந்த சிஐஎஸ்எப் போலீஸ் அதிகாரிகளை தாக்கி ரகளையில் ஈடுபட்டிருக்கிறார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.