வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் |
மலையாள நடிகரான விநாயகன், தமிழில் திமிரு, சிலம்பாட்டம், எல்லாம் அவன் செயல், மரியான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி நடித்த ‛ஜெயிலர்' படத்தில் வர்மன் என்ற வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். மேலும் சினிமாவில் வில்லனாக நடித்து வரும் விநாயகன் திரைக்குப் பின்னாலும் தனது வில்லத்தனத்தை அவ்வப்போது காண்பித்து சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டு வருகிறார்.
ஏற்கனவே போலீசாரை மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட விநாயகன், நேற்று கொச்சியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அங்கிருந்து கோவாவிற்கு சென்றவர், ஹைதராபாத்தில் உள்ள சம்சதாபாத் விமான நிலையத்தில் இறங்கி இருக்கிறார். அப்போது மது போதையில் இருந்த விநாயகன் அங்கிருந்த சிஐஎஸ்எப் போலீஸ் அதிகாரிகளை தாக்கி ரகளையில் ஈடுபட்டிருக்கிறார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.