கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
தமிழிலிருந்து தெலுங்கிற்கும், தெலுங்கிலிருந்து தமிழிற்கும் படங்கள் டப்பிங் ஆகி வருவது வழக்கம்தான். சமீபகால வருடங்களில் தமிழிலிருந்து தெலுங்கில் அதிக வசூலைக் கொடுத்த படங்கள் என்று முன்னணி நடிகர்களின் படங்களைச் சொல்ல முடியவில்லை. விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த 'பிச்சைக்காரன்' படம் அங்கு டப்பிங் ஆகி 50 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதற்குப் பிறகு அப்படியான ஒரு வசூலை வேறு யாரும் பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
விஜய் நடித்து வரும் வாரம் வெளியாக உள்ள 'தி கோட்' படத்தைத் தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். தெலுங்கில் டிரைலரைக் கூட வெளியிட்டார்கள். சுமார் 4 மில்லியன் பார்வைகளை அந்த டிரைலர் தொட உள்ளது. இந்நிலையில் படம் வெளியாக இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் தெலுங்கில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பும், வரவேற்பும் மிகவும் குறைவாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு படத்தின் படத்தை வெளியிடுவது 'புஷ்பா, குட் பேட் அக்லி' உள்ளிட்ட படங்களின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்தான் மைத்ரி டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் என்ற பெயரில் படத்தை தெலுங்கில் வினியோகம் செய்கிறார்கள்.
தமிழிலிலேயே இதுவரை படத்திற்கு எந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் மொத்த படக்குழுவினருடன் நடத்தவில்லை. வெங்கட் பிரபு மட்டும் படத்தின் டிரைலர் வெளியான போது பத்திரிகையாளர்களை சந்தித்தார். இரண்டு தினங்களுக்கு முன்பு நடப்பதாக இருந்த ஒரு சந்திப்பும் ரத்து செய்யப்பட்டது. படத் தயாரிப்பு நிறுவனம் எதற்காக இப்படி நடந்து கொள்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது என விஜய் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.