300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
மலையாள பட ஷூட்டிங்கின் போது கேரவனில் ரகசிய கேமரா வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை வீடியோவாக எடுத்து நடிகர்கள் செல்போனில் ரசிப்பதாக பிரபல நடிகை ராதிகா பகீர் குற்றம்சாட்டி உள்ளார்.
பற்ற வைத்த பாலியல் புகார்கள்
கேரள திரையுலகமே ஹேமா கமிட்டி அறிக்கையால் அரண்டு போயிருக்கிறது. பிரபல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை பெண் கலைஞர்கள் சுமத்தி உள்ளனர். மல்லுவுட் திரையுலகையே விழி பிதுங்க வைத்துள்ள இந்த விவகாரம் மாநில அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.
வழக்குகள்
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று மோகன்லால், உள்ளிட்ட பிரபல நடிகர்கள் திரைப்பட சங்க பதவிகளில் இருந்து ராஜினாமா செய்தனர். நடிகர்கள் சித்திக், முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜூ உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவாகி இருக்கிறது.
நடிகை பேட்டி
இந் நிலையில் பிரபல நடிகை ராதிகா சரத்குமார் கேரள திரையுலகில் பல ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு முக்கியமான விஷயத்தை தற்போது வெளிக் கொண்டு வந்துள்ளார். கேரள செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இதை அவர் கூறி உள்ளார்.
கேரவன் கேமரா
நடிகை ராதிகா சரத்குமார் கூறி இருப்பதாவது: கேரளாவில் படப்பிடிப்பின்போது வழங்கப்பட்டு உள்ள கேரவனில் ரகசியமாக கேமராக்களை பொருத்தி நடிகைகள் ஆடைகளின்றி காட்சி அளிக்கும் வீடியோக்களை பதிவு செய்கின்றனர். பின்னர் அந்த வீடியோக்களை அங்கே படப்பிடிப்பில் இருக்கும் நடிகர்கள் ஒன்றாக அமர்ந்து தங்களது செல்போனில் பார்த்து ரசித்துள்ளனர்.
ஓட்டல் அறை
இதுபோன்ற சம்பவங்களை பலமுறை நானே நேரில் கண்டுள்ளேன். அதனால் தான் பயந்து போய் ஓட்டலில் அறை எடுத்து, அங்கே சென்று நான் உடை மாற்றிக் கொண்டு படப்பிடிப்புத்தளத்துக்கு வருவேன். அதன் பின்னர், நானே பலமுறை எனக்கு தெரிந்த நடிகைகளிடம் கேரவன் உள்ளே போய்வரும் போது கவனமாக போகுமாறு கூறி இருக்கிறேன்.
எனக்கு தெரியும்
படப்பிடிப்பின் போது நிறைய நடிகைகளின் அறைக்கதவுகளை பலர் தட்டுவதை பார்த்து இருக்கிறேன். பல பெண்கள் இதுபோன்ற தொந்தரவுகளை தாங்காமல் எனது அறைக்கு வந்து உதவி செய்யுமாறு கேட்ட தருணங்களும் உண்டு. இன்று சில நடிகைகள் எங்களுக்கு எந்த சம்பவமும் இதுபோன்று நடக்கவில்லை என்கின்றனர். ஆனால் அதில் உண்மையில்லை. அவர்களுக்கு நடந்தது என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும் என்று கூறி உள்ளார்.