''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது |
சமீப காலமாக இளம் முன்னணி இயக்குனர்கள் இங்குள்ள முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கும்போது மற்ற மொழிகளில் இருக்கும் பிரபல முன்னணி நட்சத்திரங்களை அழைத்து வந்து சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்கும் புது ட்ரெண்டிங்கை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படி ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப் ஆகியோரை அழைத்து வந்து ரஜினியுடன் நடிக்க வைத்தார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். அந்தவகையில் தற்போது கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து பல கலர்புல்லான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அது மட்டுமல்ல மறைந்த நடிகர் விஜயகாந்த் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் மோகன்லால் ஒரு முக்கிய சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. காரணம் சமீபத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் மோகன்லாலுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படி திடீரென அவர் இந்த புகைப்படத்தை வெளியிடுவதற்கு காரணம் இந்த படத்தில் மோகன்லால் நிச்சயமாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்பதால் தான் என ரசிகர்களாக தங்கள் யூகங்களை வெளியிட்டு வருகின்றனர். படம் வெளியாவதற்கு முன்பே சஸ்பென்ஸ் உடையும் என எதிர்பார்க்கலாம்.