அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் அதிகம் இருப்பதாக நீதிபதி ஹேமா கமிஷன் அளித்த அறிக்கை தெரிவித்தது. இதையடுத்து பலரும் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இதனால் மலையாள சினிமா உலகம் அதிர்ச்சியில் இருக்கிறது. மேலும் அங்குள்ள நடிகர் சங்கமும் ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக இருந்த மோகன்லால் உள்ளிட்ட 17 நிர்வாகிகளும் ராஜினாமா செய்துள்ளனர்.
சினிமா துறையில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களை சந்திப்பது பற்றி நடிகை குஷ்பு நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் சுருக்கம் வருமாறு : சினிமா மட்டுமல்லாது எல்லா துறையிலும் இது நடக்கிறது. பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் இந்த பிரச்சனை உள்ளது. இவ்வளவு நாள் ஏன் சொல்லவில்லை என கேட்காமல் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். அதேசமயம் அதை உடனே சொன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பெண்களை ஆண்கள் மதியுங்கள். பெண்கள் வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் ஆண்களும் குரல் கொடுங்கள். இதுபோன்ற பிரச்னைகளுக்கு பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தில் இருந்து கூட ஆதரவு தருவதில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே வந்து தைரியமாக பேச வேண்டும். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் ‛நோ' என்றால் ‛நோ' தான். உங்கள் கண்ணியம், மரியாதையை ஒரு போதும் விட்டுத்தராதீர்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.