பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' | பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் |
ராயன் படத்திற்கு பிறகு 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை தனுஷ் இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகிறார். அனைகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் . ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இதன் முதல் பாடல் ' கோல்டன் ஸ்பெரோ' வருகின்ற ஆகஸ்ட் 30ந் தேதி அன்று வெளியாகிறது. இதில் பிரியங்கா மோகன் நடனம் ஆடி உள்ளார். இப்பாடல் பற்றி எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "நீக் பட முதல் பாடலை தனுஷ் உடன் இணைந்து பார்த்தேன். பிரியங்கா மோகன் ஸ்டைல் ஆக நடனம் ஆடியுள்ளார். தனுஷ் இந்த பாடல் காட்சியை பிரமாதமாக படமாக்கியுள்ளார். குறிப்பாக இந்த பாடலை தனுஷின் மூத்த மகன் யாத்ரா எழுதியுள்ளார். அற்புதமாக எழுதியுள்ளார்" என பாராட்டி பதிவிட்டுள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் இந்த பதிவு வைரலாகி வருகிறது.