எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள லேக் ஏரியாவில் அஜ்மத் பேகம் என்பவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்ததாக கூறப்படுகிறது. அஜ்மத் பேகத்தின் சகோதரர் முகமது ஜாவித் என்பவர் யுவன் சங்கர் ராஜா மீது போலீஸ் துணை கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், யுவன் சங்கர் ராஜா ரூ.20 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்தார். வாடகையை எனது சகோதரி கேட்கும்போதெல்லாம் யுவன் சங்கர் ராஜா தராமல் அலட்சியம் காட்டி மறுத்து பேசி வந்துள்ளார். தற்போது அவர் எந்த தகவலும் சொல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து கொண்டு காலி செய்வதாக பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் கூறி உள்ளார். மேலும் நேற்றும், இன்றும் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் வெளியே எடுத்து சென்றுள்ளார். யுவனிடம் வாடகை பாக்கி மற்றும் சேதத்துக்கான இழப்பீட்டை பெற்று தர வேண்டும்' எனத் தெரிவித்து இருந்தார்.
இதை மறுத்த யுவன், தனது பெயருக்கு களங்கம் கற்பிக்க வீட்டு உரிமையாளர் முயற்சிப்பதாக கூறி, ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் இசை சட்ட ரீதியாக எதிர்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக யுவனிடம் விசாரணை மேற்கொள்ள போலீசார் முடிவெடுத்துள்ளனர். விரைவில் அவர் போலீசில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என தெரிகிறது.