அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். அப்பாவை போல் சினிமாவில் ஆர்வம் உள்ள இவர் ‛சகாப்தம்' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது அன்பு இயக்கத்தில் ‛படை தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். யானையை பின்புலமாக வைத்து இந்தப்படம் தயாராகிறது.
விஜயகாந்த் இறந்த சமயத்தில் சண்முக பாண்டியன் உடன் ஒரு படத்தில் நடிக்க தயார் என அறிவித்திருந்தார் நடிகர் ராகவா லாரன்ஸ். அதன்படி படை தலைவன் படத்தில் இவர் சிறப்பு வேடத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நடிக்கவில்லை. மாறாக விஜயகாந்த்தையே ஏஐ தொழில்நுட்பம் மூலம் நடிக்க வைத்துள்ளனர்.
ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் நடிக்காதது பற்றி பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இதுபற்றி இயக்குனர் அன்பு வெளியிட்ட அறிக்கை : சண்முக பாண்டியன் கலை உலக வாழ்க்கைக்கு உதவும் பொருட்டு அவரது படத்தில் நடிப்பதாக லாரன்ஸ் வீடியோ வெளியிட்டிருந்தார். படை தலைவன் படக்குழு சார்பாக நானும், சண்முக பாண்டியனும் அவரை நேரில் சந்தித்தோம். படத்தின் கதையை கேட்டவர் தானும் நடிப்பதாக கூறினார். அதற்கான பணிகள் துவங்கிய நிலையில் எனக்கு சிறு தயக்கம் இருந்தது. படம் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் ராகவா லாரன்ஸிற்கான கதாபாத்திரம் கனமான வேடமாக இருக்குமா என தோன்றியது.
தனிப்பட்ட முறையில் மீண்டும் அவரை நான் சந்தித்து இதுபற்றி எடுத்து சொன்னேன். என் முடிவுக்கு அவரும் சம்மதம் சொன்னார். மேலும் படை தலைவன் பட புரொமோஷனுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வதாக உறுதி அளித்தார். ஆனால் இந்த படத்தில் லாரன்ஸ் நடிக்க முடியாமல் போனதன் உண்மையான காரணம் அறியாமல் அவரை பற்றி உண்மைக்கு மாறான வதந்திகள் வலைதளங்களில் பரவி வருகின்றன. அவர்களுக்கு உண்மை நிலையை தெரிவிக்கவே இந்த அறிக்கை''
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.