''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது |
தெலுங்கு திரையுலகை பொருத்தவரை பிரபல சீனியர் ஹீரோக்களின் வாரிசுகள் மற்றும் அவர்களது குடும்ப வாரிசுகளும் அவ்வப்போது திரையுலகில் கதாநாயகர்களாக அறிமுகமாகி வருகிறார்கள். பலர் தங்களது திறமையால் சாதித்து தங்களுக்கு என ஒரு இடத்தையும் தக்க வைத்து கொண்டு உள்ளார்கள். அந்த வகையில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவின் வாரிசுகள் யாரும் இதுவரை சினிமாவில் இறங்கவில்லையே என பலருக்கும் ஆச்சரியமும் சந்தேகமும் கூட எழுந்திருக்கும். இந்த நிலையில் விரைவில் பாலகிருஷ்ணாவின் மகன் மோக்சக்னா தேஜா கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்திற்கான துவக்க விழா வரும் செப்டம்பர் 6ம் தேதி மோக்சக்னா தேஜாவின் பிறந்தநாளில் நடைபெற இருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஹனுமான் படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மா இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படம் இயக்குனரின் முந்தைய படத்தைப் போல ஒரு சூப்பர் மேன் கதையம்சத்துடன் தான் உருவாக இருக்கிறதாம். முதல் படத்திலேயே சூப்பர் மேன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் பாலகிருஷ்ணாவின் மகன். அது மட்டுமல்ல பாலகிருஷ்ணாவின் மகளான நந்தமூரி தேஜஸ்வினி இந்த படத்தின் இணை தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.