காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் |
தெலுங்கு திரையுலகின் பிரபல ஹீரோவான நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யா தற்போது இளம் முன்னணி நடிகராக படங்களில் நடித்து வருகிறார். இவரும் நடிகை சமந்தாவும் ஒன்றாக இணைந்து நடித்த போது காதல் ஏற்பட்டு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ஒரு சில வருடங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்து விவாகரத்தும் பெற்று விட்டனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக நாகசைதன்யாவும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவும் காதலித்து வருவதாக செய்திகள் அடிபட்டு வந்தன. அது உண்மைதான் என்பது போல சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமண தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த ஜோதிடர் வேணு சுவாமி என்பவர் நாகசைதன்யா - சோபிதா துலிபாலா இருவரும் திருமணம் செய்து கொண்டாலும் சில வருடங்களுக்குள் அவர்களுக்கு பிரிவு ஏற்படும் என்றும், அதுவும் ஒரு பெண்ணால் ஏற்படும் என்றும் தானாகவே ஜோதிடம் கணித்து கூறினார். இவரது இந்த பேச்சு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இவர் மீது தெலுங்கு திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் வாயிலாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அது மட்டுமல்ல தெலுங்கு திரையுலக நடிகர் சங்கத்தின் தலைவரான நடிகர் விஷ்ணு மஞ்சு இவரை அழைத்து கண்டித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இன்னொரு வீடியோ வெளியிட்டுள்ள விஷ்ணு சுவாமி, “நான் வேண்டுமென்றே யார் மனதையும் புண்படுத்தும் விதமாக எதையும் கூறவில்லை. ஜோதிட கணிப்பை தான் கூறினேன். இனிமேல் நான் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்து என்னுடைய கணிப்பை பொதுவெளியில் கூறப்போவதில்லை” என்று கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்துள்ளார்.