இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
சூரரைப்போற்று படத்திற்கு பிறகு மீண்டும் சுதா கொங்கரா , சூர்யா கூட்டணியில்' புறநானூறு' என்கிற படம் உருவாகுவதாக கடந்த ஆண்டில் அறிவித்தனர். பின்னர் ஒரு சில மாதங்களில் புறநானூறு திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
புறநானூறு திரைப்படத்தில் சூர்யாவிற்கு பதிலாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படம் சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகிறது. இதனை சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இவருடன் இணைந்து மற்றொரு பிரபல கார்ப்பரேட் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜை சந்தித்து சுதா கொங்கரா சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற பிறகு லோகேஷ் இந்த படத்தில் நடிப்பார் என நெருங்கிய வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.