ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் |
இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் கை விரலில் வைத்துக் கொள்கிற அளவிற்காக மெம்மரிடி கார்டில் வெளிவந்து கொண்டிருக்கிறது. எத்தனை தியேட்டரில் வேண்டுமானாலும் ஒரே நேரத்தில் திரையிட முடியும். சென்னையில் இருந்து கொண்டே தென்காசி தியேட்டருக்கு படத்தை ஆன்லைனில் அனுப்ப முடியும்.
ஆனால் அந்த காலத்தில் பிலிம் பிரிண்ட் போட வேண்டும். ஒவ்வொரு பிரிண்டுக்கும் கணிசமான தொகை செலவாகும். இதனால் சென்னையில் நான்கைந்து பிரிண்டுகள், மற்ற மாவட்ட தலைநகர்களுக்கு 2 பிரிண்டு மற்ற பெரிய நகராட்சிகளுக்கு ஒரு பிரிண்டு என சுமார் 40 முதல் 50 பிரிண்டுகள் போட்டு அனுப்பி வைக்கப்படும்.
இந்த மாதிரியான நிலையில் ஏதாவது ஒரு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானால் ஒரே பிரிண்டை வைத்து மேலும் சில தியேட்டர்களில் படத்தை ஓட்டி விடுவார்கள். படம் திரையிடும் நேரத்தை 30 நிமிட இடைவெளிவிட்டு அறிவிப்பார்கள். ஒரு தியேட்டரில் 30 நிமிடம் ஓடிய ரீலை எடுத்துக் கொண்டு அடுத்த தியேட்டருக்கு ஓடுவார்கள் இப்படியாக அந்த ரீலில் மூன்று நான்கு தியேட்டர்களுக்கு படம் செல்லும்.
இப்படி சினிமா ரீல்கள் தியேட்டர் விட்டு தியேட்டர் ஓடிய சம்பவங்களின் ஹைலைட் இலங்கை யாழ்பாணத்தில் நடந்தது. இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாண நகரில் எந்த ஒரு படமும் ஒரே ஒரு தியேட்டரில் மட்டுமே திரையிடப்படும். தமிழ்படங்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் போது மூன்று பிரதிகள் மட்டுமே தருவிக்கப்படும். அதில் இரு பிரதிகள் தலைநகர் கொழும்புவிலும் ( கெப்பிட்டல், பிளாசா ) மறு பிரதி யாழ் நகரிலும் திரையிடப்படும்.
1973ல் 'வசந்தமாளிகை' திரையிடப்பட்டது. வழக்கம்போல 3 பிரிண்டுகள் மட்டும் அனுப்பப்பட்டது. அந்த வகையில் யாழ்பாணத்திற்கு ஒரு பிரிண்ட் சென்றது. ஆனால் படத்தை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் தியேட்டர் முன் குவிந்தார்கள். முட்டி மோதிய ரசிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இரண்டு அரங்கிலாவது படத்தை திரையிட்டாலேயே நிலைமையை சமாளிக்க முடியும் என்ற நிலை.
இந்த நிலைமையை சமாளிப்பதற்காக கொழும்பில் இருந்து ஒரு பிரதியை கேட்க முடியாது. ஏனெனில் கொழும்பிலும் இதே நிலைமைதான். தமிழ்நாட்டில் இருந்து வரவைக்கவும் கால அவகாசம் தேவைப்படும். எனவே யாழ் நகரில் இருக்கும் ஒரு பிரதியை வைத்தே நிலைமையை எப்படி சமாளிப்பது என்று தியேட்டர் நிர்வாகம் சிந்தித்தது. ஒரே ஒரு பிரதியை வைத்துக் கொண்டே இரண்டு அரங்குகளில் படம் ஒரே நாளில் திரையிடப்பட்டது.
இப்படி 100 நாட்கள் வரை ஒரே பிரதியை வைத்துக்கொண்டே இரு அரங்குகள் மூலம் வசந்த மாளிகை திரையிடப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகே தமிழ்நாட்டிலும் இது கடைபிடிக்கப்பட்டதாக சொல்வார்கள்.