பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'இந்தியன் 2'. இப்படத்திற்கு மீடியாக்களில் கலவையான விமர்சனங்களும், சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களும் வெளிவந்தன.
படத்தை 'பார்ட் பார்ட்' ஆக பிரித்து பலரும் விமர்சித்து வருகிறார்கள். இப்படி விமர்சிப்பதில் ஒரு உள்நோக்கம் உள்ளது என்றும் சிலர் கூறுகிறார்கள். இத்தனை விதமான விமர்சனங்களுக்கும் படக்குழுவிலிருந்து யாரும் கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை.
இன்று இரண்டாவது வாரத்தைத் தொட்டுள்ளது 'இந்தியன் 2'. இருந்தாலும் படம் குறித்த வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவுகின்றன.
படத்தில் இந்தியன் தாத்தாவைக் கைது செய்யத் துடிக்கும் சிபிஐ அதிகாரியாக பாபி சிம்ஹா நடித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்திற்கு வரும் விமர்சனங்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, “எல்லாருமே ரொம்ப அறிவாளியா நினைச்சிட்டிருக்காங்க. ஒரு விஷயம் நல்லாருக்குன்னு சொன்னா நம்மளை முட்டாளா நினைச்சுக்குவாங்களோன்னு ஏதோ ஒண்ணு பேசிட்டிருக்காங்க. அந்த அறிவாளிங்களைப் பத்தி நாம கவலைப்படத் தேவையில்லை. நமக்குத் தேவை ஆடியன்ஸ், அவங்களுக்குப் புடிச்சிச்சா, நமக்கு அவங்கதான் தேவை, அறிவாளிங்க தேவையில்லை, அறிவை வச்சிக்கிட்டு அவங்க இருக்கட்டும்,” என்று கூறியுள்ளார்.