ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'இந்தியன் 2'. இப்படத்திற்கு மீடியாக்களில் கலவையான விமர்சனங்களும், சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களும் வெளிவந்தன.
படத்தை 'பார்ட் பார்ட்' ஆக பிரித்து பலரும் விமர்சித்து வருகிறார்கள். இப்படி விமர்சிப்பதில் ஒரு உள்நோக்கம் உள்ளது என்றும் சிலர் கூறுகிறார்கள். இத்தனை விதமான விமர்சனங்களுக்கும் படக்குழுவிலிருந்து யாரும் கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை.
இன்று இரண்டாவது வாரத்தைத் தொட்டுள்ளது 'இந்தியன் 2'. இருந்தாலும் படம் குறித்த வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவுகின்றன.
படத்தில் இந்தியன் தாத்தாவைக் கைது செய்யத் துடிக்கும் சிபிஐ அதிகாரியாக பாபி சிம்ஹா நடித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்திற்கு வரும் விமர்சனங்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, “எல்லாருமே ரொம்ப அறிவாளியா நினைச்சிட்டிருக்காங்க. ஒரு விஷயம் நல்லாருக்குன்னு சொன்னா நம்மளை முட்டாளா நினைச்சுக்குவாங்களோன்னு ஏதோ ஒண்ணு பேசிட்டிருக்காங்க. அந்த அறிவாளிங்களைப் பத்தி நாம கவலைப்படத் தேவையில்லை. நமக்குத் தேவை ஆடியன்ஸ், அவங்களுக்குப் புடிச்சிச்சா, நமக்கு அவங்கதான் தேவை, அறிவாளிங்க தேவையில்லை, அறிவை வச்சிக்கிட்டு அவங்க இருக்கட்டும்,” என்று கூறியுள்ளார்.