மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி | பிளாஷ்பேக்: டாக்டர் படிப்பை கைவிட்டு ஆக்டர் ஆன கோட்டா சீனிவாசராவ் |
கடந்த 2021ம் ஆண்டு நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்றார் சமந்தா. அதன்பிறகும் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறார். அதிலும் புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனமாடி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இடையில் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார். சமீபத்தில் விவாகரத்துக்கு பிறகு தான் சந்தித்த விஷயங்கள் குறித்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் சமந்தா.
அதில், ‛‛வாழ்க்கையில் சில விஷயங்களை மாற்ற வேண்டுமென்று நினைப்போம். குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் என்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் எல்லாம் நடந்திருக்கக் கூடாது என்று தான் நினைக்கிறேன். என்றாலும் எதுவும் நம் கையில் இல்லை. வாழ்க்கை என்ன கொடுக்கிறதோ அதை நாம் சந்தித்து தான் ஆக வேண்டும். அனைவர் வாழ்க்கையிலும் பிரச்னைகள், வலிகள் இருக்கிறது. அதை நாம் எப்படி கடந்து வருகிறோம் என்பது தான் முக்கியம். அந்த வலியை கடந்து விட்டால் நாம் வெற்றியாளர்தான். அந்த வகையில் நான் தற்போது என்னை வலிமையானவளாக உணர்கிறேன். குறிப்பாக ஆன்மிகம் தான் எனது வலியை கடந்து வலிமை பெற எனக்கு உதவி செய்தது'' என்று கூறியுள்ளார்.