அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் அஷ்வின் குமார். அதன்பின் உடனடியாக அவருக்கு சினிமாவில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'என்ன சொல்லப் போகிறாய்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.
அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியது அவருக்கு எதிராக அமைந்து, அவரது ஆரம்பத்தையே ஆட்டி வைத்தது. “நான் கதை கேட்கும் போது நல்லா இல்லைன்னா தூங்கிடுவேன். 40 கதைக்கும் மேல் கேட்டு நான் தூங்கியிருக்கேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை இதுதான்,” என அப்போது அவர் பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் வந்தன. பல உதவி இயக்குனர்கள் அவரைக் கண்டித்தார்கள். மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
அப்படத்திற்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் 'செம்பி' படத்தில் நடித்தார். அப்படமும் ஓடவில்லை. தற்போது முன்னாள் டிவி தொகுப்பாளரும், 'புத்தகம்' படத்தை இயக்கியவருமான விஜய் ஆதிராஜ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்க உள்ள 'நொடிக்கு நொடி' படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் அஷ்வின் குமார்.
அவரை தூங்கவிடாமல் 'நொடிக்கு நொடி' விழிப்புடன் இருக்கும்படியான கதையைச் சொல்லியிருப்பார் விஜய் ஆதிராஜ் எனத் தெரிகிறது. படம் வரும் வரை பொறுத்திருப்போம்.