கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
ஜில்லா, தர்பார், பாபநாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். தற்போது அவர் 35 என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். அவருடன் பாக்யராஜ், கவுதமி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இதையடுத்து இந்த படம் திரைக்கு வர இன்னும் 35 நாட்கள் இருக்கும் நிலையில், அது குறித்த ஒரு தகவலை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார் நிவேதா தாமஸ்.
அந்த பதிவில், எனது படம் வெளியாக இன்னும் 35 நாட்களே உள்ளன. அந்த படத்தை பார்க்க சின்ன குழந்தை போன்று ஆர்வத்தில் காத்திருக்கிறேன். எனது முகத்தில் 35 படம் சிரிப்பை வர வைத்தது. நீங்கள் அனைவரும் இந்த படத்தை ஆவலுடன் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். இது எனது படம் என்று நான் பெருமையாக கூறுகிறேன். ஆனபோதிலும் இன்னும் 35 நாட்களுக்கு பிறகு இது உங்கள் படமாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார் நிவேதா தாமஸ்.
குட்டி ஸ்டோரி என்ற தலைப்பில் அவர் பதிவிட்டுள்ள இந்த பதிவு வைரலானது.