'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
ஜில்லா, தர்பார், பாபநாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். தற்போது அவர் 35 என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். அவருடன் பாக்யராஜ், கவுதமி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இதையடுத்து இந்த படம் திரைக்கு வர இன்னும் 35 நாட்கள் இருக்கும் நிலையில், அது குறித்த ஒரு தகவலை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார் நிவேதா தாமஸ்.
அந்த பதிவில், எனது படம் வெளியாக இன்னும் 35 நாட்களே உள்ளன. அந்த படத்தை பார்க்க சின்ன குழந்தை போன்று ஆர்வத்தில் காத்திருக்கிறேன். எனது முகத்தில் 35 படம் சிரிப்பை வர வைத்தது. நீங்கள் அனைவரும் இந்த படத்தை ஆவலுடன் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். இது எனது படம் என்று நான் பெருமையாக கூறுகிறேன். ஆனபோதிலும் இன்னும் 35 நாட்களுக்கு பிறகு இது உங்கள் படமாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார் நிவேதா தாமஸ்.
குட்டி ஸ்டோரி என்ற தலைப்பில் அவர் பதிவிட்டுள்ள இந்த பதிவு வைரலானது.