இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஜில்லா, தர்பார், பாபநாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். தற்போது அவர் 35 என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். அவருடன் பாக்யராஜ், கவுதமி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இதையடுத்து இந்த படம் திரைக்கு வர இன்னும் 35 நாட்கள் இருக்கும் நிலையில், அது குறித்த ஒரு தகவலை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார் நிவேதா தாமஸ்.
அந்த பதிவில், எனது படம் வெளியாக இன்னும் 35 நாட்களே உள்ளன. அந்த படத்தை பார்க்க சின்ன குழந்தை போன்று ஆர்வத்தில் காத்திருக்கிறேன். எனது முகத்தில் 35 படம் சிரிப்பை வர வைத்தது. நீங்கள் அனைவரும் இந்த படத்தை ஆவலுடன் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். இது எனது படம் என்று நான் பெருமையாக கூறுகிறேன். ஆனபோதிலும் இன்னும் 35 நாட்களுக்கு பிறகு இது உங்கள் படமாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார் நிவேதா தாமஸ்.
குட்டி ஸ்டோரி என்ற தலைப்பில் அவர் பதிவிட்டுள்ள இந்த பதிவு வைரலானது.