‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி |
நடிகை ராஷ்மிகா மற்ற முன்னணி நடிகைகளிடமிருந்து ரொம்பவே வித்தியாசப்பட்டு தெரிபவர். குறிப்பாக பொது இடங்களில் அல்லது சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் தன்னை எந்த இடத்தில் சந்திக்க முற்பட்டாலும் முகம் சுளிக்காது அவர்களுடன் இணைந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்வார்.
சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடி அவர்களது கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொல்பவர். கடந்த சில நாட்களாக ராஷ்மிகா, விமான நிலையத்திற்கு வரும்போதெல்லாம் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி வந்திருக்கிறார். அப்படி ஒரு புகைப்படத்தை சமீபத்தில் தனது சோசியல் மீடியா பக்கத்திலும் வெளியிட்டிருந்தார் ராஷ்மிகா. அதேசமயம் ரசிகர்கள் தனது முகத்தை பார்க்கக் கூடாது என்று தவிர்ப்பதற்காகவே அவர் இவ்வாறு வருகிறாரோ என்று ரசிகர் ஒருவர் இதற்கு கமெண்ட் தெரிவித்து இருந்தார்.
ரசிகர்களின் ஆயிரக்கணக்கான கமெண்ட்டுகளில் இந்த ஒரு கமெண்ட் ராஷ்மிகாவின் பார்வையில் எப்படியோ பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு பதிலளிக்கும் விதமாக, “நிச்சயமாக அப்படியெல்லாம் எதுவும் இல்லை.. தொடர் படப்பிடிப்புகளால் சரும பாதிப்புகள் ஏற்படுகின்றன. படப்பிடிப்பு இல்லாத நேரத்திலாவது சருமத்திற்கு சற்று ஓய்வு கிடைக்கட்டுமே என்று தான் மாஸ்க் அணிந்து வருகிறேன்” என்று பதிலளித்து அவரை சமாதானப்படுத்தியுள்ளார் ராஷ்மிகா.