நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் அறிமுகமானவர் துஷாரா விஜயன். அதன் பிறகு சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன் போன்ற படங்களில் நடித்தவர் தற்போது வேட்டையன், ராயன் போன்ற படங்களில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து விக்ரமுடன் ‛வீர தீர சூரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், எனது 35வது வயதில் சினிமாவை விட்டு வெளியேறி விடுவேன். அதன் பிறகு உலகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாக உள்ளது. இப்போது எனக்கு 26 வயது ஆகும் நிலையில், அடுத்த 9 ஆண்டுகளுக்குள் நான் நடிக்க நினைக்கும் அத்தனை மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் நடித்து விடுவேன் என்கிறார் துஷாரா விஜயன்.