நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
இந்திய சினிமாவை குறிப்பாக தென்னிந்திய சினிமாவை உலக அளவிற்கு கொண்டு சென்றவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. சினிமாவின் சிகரமான ஆஸ்கரையும் தொட்டார். 2001ம் ஆண்டு 'ஸ்டூடண்ட் நம்பர்-1' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ராஜமவுலி தொடர்ந்து சிம்ஹத்ரி, சை, சத்ரபதி உள்ளிட்ட படங்களை இயக்கினார். என்றாலும் 2012ம் ஆண்டு இயக்கிய 'நான் ஈ' படம் நாடு முழுவதும் பேசப்பட்டது. தமிழிலும் அப்படம் பெரிய வெற்றியை பெற்றது. சாதாரண நடிகராக இருந்த நானியும், நடிகையாக இருந்த சமந்தாவும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்கள்.
'பாகுபலி' இரண்டு பாகங்கள், ஆர்ஆர்ஆர் படங்களின் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தார். 2 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் மகாபாரதத்தை 4 பாகங்களாக எடுக்கும் முயற்சியில் இருக்கிறார். இதற்கு இடையில் மகேஷ் பாபு நடிக்கும் சூப்பர் ஹீரோ படத்தை இயக்க இருக்கிறார்.
இந்த நிலையில் எஸ்.எஸ்.ராஜமவுலியின் இந்த அசுர வளர்ச்சி, அவரின் கடின உழைப்பு, அவரது குடும்பம் இவற்றை அடிப்படையாக வைத்து 'மார்டன் மாஸ்டர்ஸ்' என்ற பெயரில் ஆவணப் படம் ஒன்று தயாராகி உள்ளது. இதனை அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிலிம் கம்பானியன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இதனை ராகவ் கண்ணா இயக்கியுள்ளார். ராஜமவுலியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 2ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.