2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
தெலுங்குத் திரையுலகத்தில் அதிக வசூலைப் பிடித்த 3வது படமாக 'கல்கி 2898 ஏடி' படம் முன்னேறியுள்ளது. பிரபாஸ் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த 'சலார்' படத்தின் வசூலைக் கடந்து இந்த சாதனையைப் படைத்துள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'சலார்' படம் 600 கோடிக்கும் சற்றே கூடுதலாக தொகையை மட்டுமே வசூலித்தது. எதிர்பார்த்ததை விடவும் அந்தப் படத்திற்கு வசூல் குறைவுதான். 'கேஜிஎப்' இயக்குனர் இயக்கிய படம் என்பதால் 1000 கோடியைக் கடக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், படம் அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தவில்லை.
அதேசமயம் கடந்த வாரம் பிரபாஸ் நடித்து வெளிவந்த 'கல்கி 2898 ஏடி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது ரூ.700 கோடி வசூலைக் கடந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படம் தற்போது 'பிரேக் ஈவன்' ஆகிவிட்டது. இனி வசூலாகும் தொகை லாபக் கணக்கில் சேரும். தயாரிப்பாளரைப் பொறுத்தவரையில் அவருக்கு லாபம்தான். படத்தின் ஓடிடி, சாட்டிலைட் உரிமையே 100 கோடிக்கும் அதிகமாக விற்பனையாகி உள்ளது.
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்து வெளிவந்த படங்கள்(சலார் தவிர்த்து) அனைத்துமே வசூல் ரீதியாகத் தோல்வியடைந்த நிலையில் இந்தப் படம் அவரையும் சேர்த்து காப்பாற்றியுள்ளது.