அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
ரசிகர் ஒருவரைக் கடத்தி வந்து கொலை செய்த குற்றத்திற்காக கன்னட நடிகர் தர்ஷன், அவரது காதலி நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நீதிமன்றக் காவலுக்குப் பிறகு பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில் தர்ஷன் அடைக்கப்பட்டார். இதுவரையில் அவரை சந்திக்காமல் இருந்த குடும்பத்தினர் நேற்று சிறைக்குச் சென்று தர்ஷனை சந்தித்துள்ளனர்.
தர்ஷன் அம்மா மீனா, சகோதரர் தினகர், மனைவி விஜயலட்சுமி, மகன் வினீஷ் நேற்று காலையில் சிறையில் தர்ஷனை சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது குடும்பத்தினரிடம் தர்ஷன் கதறி அழுதுள்ளதாகத் தெரிகிறது. அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் தெரிவித்தனராம்.
சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசுவாமி என்ற தர்ஷனின் ரசிகர், தர்ஷனின் காதலியான பவித்ரா கவுடாவுக்கு சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து ஆபாசமாக மெசேஜ்கள் அனுப்பியுள்ளார். அதனால், வந்த ஆத்திரத்தில்தான் தர்ஷன் ஆட்களை வைத்து அவரைக் கொன்றார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அதன்பின்னரே சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ரேணுகா சுவாமியின் மனைவி அவரது முதல் குழந்தையை விரைவில் பெற்றெடுக்க உள்ளார்.
ஜூலை 4 முதல் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் தர்ஷன். இந்த கொலை விவகாரம் கர்நாடகாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.