காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
ரசிகர் ஒருவரைக் கடத்தி வந்து கொலை செய்த குற்றத்திற்காக கன்னட நடிகர் தர்ஷன், அவரது காதலி நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நீதிமன்றக் காவலுக்குப் பிறகு பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில் தர்ஷன் அடைக்கப்பட்டார். இதுவரையில் அவரை சந்திக்காமல் இருந்த குடும்பத்தினர் நேற்று சிறைக்குச் சென்று தர்ஷனை சந்தித்துள்ளனர்.
தர்ஷன் அம்மா மீனா, சகோதரர் தினகர், மனைவி விஜயலட்சுமி, மகன் வினீஷ் நேற்று காலையில் சிறையில் தர்ஷனை சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது குடும்பத்தினரிடம் தர்ஷன் கதறி அழுதுள்ளதாகத் தெரிகிறது. அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் தெரிவித்தனராம்.
சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசுவாமி என்ற தர்ஷனின் ரசிகர், தர்ஷனின் காதலியான பவித்ரா கவுடாவுக்கு சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து ஆபாசமாக மெசேஜ்கள் அனுப்பியுள்ளார். அதனால், வந்த ஆத்திரத்தில்தான் தர்ஷன் ஆட்களை வைத்து அவரைக் கொன்றார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அதன்பின்னரே சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ரேணுகா சுவாமியின் மனைவி அவரது முதல் குழந்தையை விரைவில் பெற்றெடுக்க உள்ளார்.
ஜூலை 4 முதல் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் தர்ஷன். இந்த கொலை விவகாரம் கர்நாடகாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.