ஒரே நாளில் தமிழ், தெலுங்கில் இரண்டு முக்கிய ரீரிலீஸ் | 50 கோடி வசூல் கடந்த 'பாகுபலி தி எபிக்' | கோயில் பொக்கிஷ பின்னணியில் உருவாகும் புராண திரில்லர் ‛நாகபந்தம்' | இயக்குனரை தேர்ந்தெடுத்த கதை | ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு | வெளியீட்டிற்கு முன்பே லாபம் சம்பாதிக்கும் 'ஜனநாயகன்' | விஷால் 8 கோடி மோசடி குறித்து அரசு அறிக்கை: தயாரிப்பாளர் சங்க தலைவர் தகவல் | பிளாஷ்பேக்: முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: தமிழில் படமான நோபல் பரிசு எழுத்தாளரின் கதை | பீடி, சுருட்டு குடிக்க பயிற்சி எடுத்த கீதா கைலாசம் |

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி ஆகியோரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛கல்கி 2898 ஏடி'. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த 27ம் தேதி வெளியான இந்த படம் முதல் நாளில் 191.5 கோடி வசூலித்த நிலையில், இரண்டாவது நாள் முடிவில் 295.5 கோடி வசூலித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இதற்கு முன்பு பிரபாஸ் நடித்து வெளியான பாகுபலி- 2, சாஹோ, ஆதி புருஸ், சலார் ஆகிய நான்கு படங்களும் முதல் நாளில் 100 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், தற்போது ஐந்தாவதாக இந்த கல்கி படமும் அந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. மேலும், கல்கி படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், கல்கி 2898 ஏடி படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு 60% முடிவடைந்து விட்டது. முக்கியமான காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் எப்போது என்று இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.




