இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
பிரபல ஹீரோக்களை பார்ப்பதற்காக படப்பிடிப்பு தளங்களுக்கு மட்டுமல்லாமல் அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் தங்களது அபிமான நடிகருடன் புகைப்படம் அல்லது செல்பி எடுத்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது இயல்பு தான். ஆனால் ரசிகர் கூட்டத்திலிருந்து ஹீரோக்களை பாதுகாப்பதற்காக சுற்றிலும் வரும் பவுன்சர்கள் இதுபோன்ற ரசிகர்களை கட்டுப்படுத்துகிறோம் என்கிற பெயரில் கொஞ்சம் முரட்டுத்தனமாகவே டீல் செய்து வருகிறார்கள். சமீபத்தில் விமான நிலையத்தில் நடிகர் நாகார்ஜூனாவும் தனுஷூம் நடந்து வந்து கொண்டிருந்தபோது நாகார்ஜூனாவுடன் ஒரு ரசிகர் புகைப்படம் எடுக்க வந்த சமயத்தில் நாகர்ஜூனாவின் பாடிகார்ட் அவரை தள்ளிவிட்டார்.
அதை கவனிக்காமல் நாகார்ஜூனா முன்னே சென்று விட்டாலும் அவருக்கு பின்னே வந்த தனுஷ் இதை பார்த்தும் கூட கண்டும் காணாதது போல சென்று விட்டார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி நாகார்ஜூனா, தனுஷ் இருவர் மீதும் மிகப்பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து நடிகர் நாகார்ஜூனா, இந்த விவகாரம் தற்போது தான் தனது கவனத்திற்கு வந்தது என்றும் இதற்காக தான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் எதிர்காலத்தில் இதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்றும் கூறி சர்ச்சையின் தீவிரத்தை குறைத்தார். அது மட்டுமல்ல சமீபத்தில் தன்னுடன் ஆவலாக படம் எடுக்க வந்த ரசிகர்களுடனும் பவுன்சர்களை ஒதுங்கி நிற்க சொல்லிவிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்த நிகழ்வு நடந்து இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில் தற்போது தனுஷை இதேபோன்று சந்தித்து புகைப்படம் எடுக்க வந்த ரசிகர் ஒருவரை அவரது பாடிகார்ட் தள்ளிவிட்ட அதிர்ச்சி நிகழ்வு நடந்துள்ளது. தற்போது தனுஷ் நடித்து வரும் குபேரா படத்தின் படப்பிடிப்பு மும்பை ஜூஹூ பீச் பகுதியில் நடைபெற்று வருகிறது. அப்போது தனுஷ் அங்கே வந்தபோது ஒரு ரசிகர் அவரை நோக்கி செல்பி எடுக்க வர, தனுஷின் பவுன்சர் அவரை தள்ளிவிட்டுள்ளார். இதை தடுக்க தனுஷ் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து தனுஷ் மீண்டும் நெட்டிசன்களின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார். ரசிகர்களாக பார்த்து திருந்தும் வரை இது போன்ற சர்ச்சை நிகழ்வுகள் நடக்கத்தான் செய்யும்.