Advertisement

சிறப்புச்செய்திகள்

கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் சாதி வெறியன்தான் : நடிகர் ரஞ்சித் ஆவேசம்

22 ஜூன், 2024 - 06:27 IST
எழுத்தின் அளவு:
I-am-a-caste-fanatic:-Actor-Ranjith-Avesam

கோவை கோனியம்மன் கோவிலில், 'கவுண்டம்பாளையம்' திரைப்பட இயக்குநரும், பிரபல நடிகருமான ரஞ்சித் மற்றும் பட குழுவினர் சாமி தரிசனம் செய்தனர். பின், நடிகர் ரஞ்சித் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

'கவுண்டம்பாளையம்' திரைப்படம் ஜூலை 5ம் தேதி வெளியாகிறது. கோவை பகுதியை சுற்றி படம் எடுக்கப்பட்டுள்ளது. நாடக காதலில் பாதிக்கப்பட்ட, குடும்ப பெண்களின் கண்ணீரை படத்தில் மையப்படுத்தி உள்ளேன்.

சுயமரியாதை திருமணம் என சொல்லி, எவ்வளவோ கொடுமைகள் திருநெல்வேலியில் நடந்துள்ளன. சுயமரியாதை திருமணங்களை நிறுத்த வேண்டும். சமூக நீதி பேசினால் எனக்கு கடும் கோபம் வரும்.

நான் சாதி வெறியன்தான்

சுயமரியாதை, சமூக நீதி பேசுபவர்கள் முதலில் அவர்களின் குடும்பத்தில் இருக்கும் பெண்ணுக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைத்துவிட்டு, மற்ற பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கட்டும். பெற்றோர் இல்லாமல் திருமணம் நடக்கக் கூடாது என சட்டம் கொண்டு வர வேண்டும். நான் நாடக காதல் என்று சொல்லும் போது, மட்டும் என்னை சாதி வெறியனாக பார்க்கிறார்கள். இதற்காக என்னை எதிர்த்தால், நான் சாதி வெறியன் தான்.

கள்ளச்சாராயம் விற்பவர்கள் சேர் பிடித்து சட்டசபையில் அமர்ந்துள்ளனர். கடன் வாங்கி நடத்தும் ஆட்சி நல்ல ஆட்சியா. நாளைய தலைமுறையை காப்பாற்ற, அரசியல் மாற்றம் வேண்டும்.

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களுக்கு, அரசியல் கட்சியினர் போட்டி போட்டு பணம் கொடுக்கின்றனர். சாலையில் திரும்பும் இடங்களில் எல்லாம், டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. அதை பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை.

சாதாரண பிளாஸ்டிக்கையே, இவர்களால் ஒழிக்க முடியாத போது எப்படி கள்ளசாரயத்தை ஒழிப்பார்கள்? விவசாயிகள் தற்கொலை செய்தபோது, ஏன் அரசு நிவாரணம் கொடுக்கவில்லை? கள்ளுக்கடையை திறக்க வேண்டும்.

கள்ளுக்கடையில் வருமானம் இல்லாத காரணத்தினால், அரசியல்வாதிகள் விரும்புவதில்லை. தமிழ்நாடு, மதுவில் வரும் வருமானத்தில் தான் வளர்ச்சி அடைந்து வருகிறது.

இவ்வாறு, நடிகர் ரஞ்சித் தெரிவித்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இறந்த பின்னரும் மகனுக்கு கை கொடுக்கும் விஜயகாந்த்இறந்த பின்னரும் மகனுக்கு கை ... தென்னிந்தியர்கள் பற்றி இட்லி, தோசை, சாம்பார் கமென்ட் : ஸ்ருதிஹாசன் கோபம் தென்னிந்தியர்கள் பற்றி இட்லி, தோசை, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in