'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு |
ஷாரூக்கான் நடித்த 'ஜவான்' படத்திற்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமாகியவர் தமிழ் இயக்குனரான அட்லி. அந்தப் படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. அதற்கான கதையைக் கூட அவர் அல்லு அர்ஜுனிடம் சொல்லிவிட்டார் என்றார்கள்.
இந்நிலையில் அந்தப் படத்தைத் தற்போது 'டிராப்' செய்துவிட்டதாக டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்ப கட்ட நிலையிலேயே இப்படம் டிராப் ஆனதற்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை. இருந்தாலும் ஆந்திராவில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் ஒரு காரணம் என்கிறார்கள்.
'புஷ்பா 2' படம் வெளிவந்த பிறகுதான் அல்லு அர்ஜுனின் திட்டம் என்னவாக இருக்கும் என்று தெரியுமாம். ஆந்திராவில் ஆட்சியை இழந்த ஒய்எஸ்ஆர் கட்சியைச் சேர்ந்த அவரது நண்பர் ரவி கிஷோருக்காக அவர் செய்த பிரச்சாரம் காரணமாக கடும் கமெண்ட்டுகள் வெளியானது. அது அல்லு அர்ஜுனின் எதிர்வரும் படங்களில் எப்படி எதிரொலிக்கும் என்பது போகப் போகத் தெரியும்.