சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் | விஷ்வம்பரா - 70 வயதிலும் நடனத்தில் அசத்தும் சிரஞ்சீவி | ‛‛என்னிடம் நானே மன்னிப்பு கேட்க வேண்டும்'': தவறில் இருந்து பாடம் கற்ற சமந்தா | ‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் |
ஷாரூக்கான் நடித்த 'ஜவான்' படத்திற்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமாகியவர் தமிழ் இயக்குனரான அட்லி. அந்தப் படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. அதற்கான கதையைக் கூட அவர் அல்லு அர்ஜுனிடம் சொல்லிவிட்டார் என்றார்கள்.
இந்நிலையில் அந்தப் படத்தைத் தற்போது 'டிராப்' செய்துவிட்டதாக டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்ப கட்ட நிலையிலேயே இப்படம் டிராப் ஆனதற்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை. இருந்தாலும் ஆந்திராவில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் ஒரு காரணம் என்கிறார்கள்.
'புஷ்பா 2' படம் வெளிவந்த பிறகுதான் அல்லு அர்ஜுனின் திட்டம் என்னவாக இருக்கும் என்று தெரியுமாம். ஆந்திராவில் ஆட்சியை இழந்த ஒய்எஸ்ஆர் கட்சியைச் சேர்ந்த அவரது நண்பர் ரவி கிஷோருக்காக அவர் செய்த பிரச்சாரம் காரணமாக கடும் கமெண்ட்டுகள் வெளியானது. அது அல்லு அர்ஜுனின் எதிர்வரும் படங்களில் எப்படி எதிரொலிக்கும் என்பது போகப் போகத் தெரியும்.