அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கல்கி 2898 எடி'. இப்படம் ஜுன் 27ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய விழாவை ஆந்திர மாநிலத்தில் நடத்த உள்ளார்கள்.
ஆந்திராவின் தலைநகராக அமைய உள்ள அமராவதி நகரில் நடக்க உள்ள முதலாவது பிரம்மாண்டமான சினிமா விழாவாக இது இருக்கும். இந்த விழாவில் கலந்து கொள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல். இந்த விழாவின் மூலம் இந்தப் படத்தை இந்திய அளவில் பேச வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிரம்மாண்டமாக நடத்த உள்ளார்களாம். அதன்பின் சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இந்தப் படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளதாம்.