கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
தமிழ்த் திரையுலகத்தில் குறுகிய காலத்தில் திறமையான நடிகர் என்ற பெயரை பெற்றவர் விஜய் சேதுபதி. ஒரு குறுகிய வட்டத்திற்குள் சிக்கிக் கொள்ளாமல் பிஸியான கதாநாயகனாக இருந்த போதே 'பேட்ட, மாஸ்டர், விக்ரம்' ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்தார். வயதான கதாபாத்திரங்களிலும் நடித்து தான் ஒரு வித்தியாசமான நடிகர் என்ற பெயரைப் பெற்றார்.
'96' படத்திற்குப் பிறகு அவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படங்கள் அவருக்கு வெற்றியைத் தரவில்லை. அவருக்குரிய பாராட்டுக்களும் கிடைக்கவில்லை. அவற்றை நேற்று வெளிவந்த விஜய்சேதுபதியின் 50வது படமான 'மகாராஜா' படம் போக்கியிருக்கிறது. விமர்சனங்களும், ரசிகர்களின் வரவேற்பும் படத்திற்கு நன்றாகவே கிடைத்து வருகிறது.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியாகி உள்ள இப்படம் தெலுங்கிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 50வது படம் என்பது எந்த ஒரு கதாநாயகனுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. விஜய் சேதுபதியைப் பொறுத்தவரையில் அது திருப்பத்தைத் தந்த ஒரு படமாகவும் அமைந்துவிட்டது.