காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு | ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு |
தமிழ்த் திரையுலகத்தில் குறுகிய காலத்தில் திறமையான நடிகர் என்ற பெயரை பெற்றவர் விஜய் சேதுபதி. ஒரு குறுகிய வட்டத்திற்குள் சிக்கிக் கொள்ளாமல் பிஸியான கதாநாயகனாக இருந்த போதே 'பேட்ட, மாஸ்டர், விக்ரம்' ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்தார். வயதான கதாபாத்திரங்களிலும் நடித்து தான் ஒரு வித்தியாசமான நடிகர் என்ற பெயரைப் பெற்றார்.
'96' படத்திற்குப் பிறகு அவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படங்கள் அவருக்கு வெற்றியைத் தரவில்லை. அவருக்குரிய பாராட்டுக்களும் கிடைக்கவில்லை. அவற்றை நேற்று வெளிவந்த விஜய்சேதுபதியின் 50வது படமான 'மகாராஜா' படம் போக்கியிருக்கிறது. விமர்சனங்களும், ரசிகர்களின் வரவேற்பும் படத்திற்கு நன்றாகவே கிடைத்து வருகிறது.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியாகி உள்ள இப்படம் தெலுங்கிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 50வது படம் என்பது எந்த ஒரு கதாநாயகனுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. விஜய் சேதுபதியைப் பொறுத்தவரையில் அது திருப்பத்தைத் தந்த ஒரு படமாகவும் அமைந்துவிட்டது.