காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
கடந்த 2012ல் விஜய்யை வைத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால். அதைத் தொடர்ந்து அஞ்சான் படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்தார். தற்போது பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் வில்லனாக நடிப்பதற்காக எட்டு வருடம் கழித்து மீண்டும் தமிழுக்கு வருகிறார் வித்யுத் ஜாம்வால்.
இது குறித்து ஏற்கனவே செய்திகள் கசிந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதே சமயம் ஏற்கனவே நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் வித்யுத் ஜாம்வால் கலந்து கொண்டு நடித்து வருகிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு அதை உறுதிப்படுத்தி உள்ளது. அந்த வகையில் 12 வருடங்கள் கழித்து மீண்டும் ஏ ஆர் முருகதாஸ் டைரக்சனில் நடிக்கிறார் வித்யுத் ஜாம்வால்.