ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் |

கடந்த 2012ல் விஜய்யை வைத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால். அதைத் தொடர்ந்து அஞ்சான் படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்தார். தற்போது பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் வில்லனாக நடிப்பதற்காக எட்டு வருடம் கழித்து மீண்டும் தமிழுக்கு வருகிறார் வித்யுத் ஜாம்வால்.
இது குறித்து ஏற்கனவே செய்திகள் கசிந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதே சமயம் ஏற்கனவே நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் வித்யுத் ஜாம்வால் கலந்து கொண்டு நடித்து வருகிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு அதை உறுதிப்படுத்தி உள்ளது. அந்த வகையில் 12 வருடங்கள் கழித்து மீண்டும் ஏ ஆர் முருகதாஸ் டைரக்சனில் நடிக்கிறார் வித்யுத் ஜாம்வால்.