கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
ஆந்திர மாநில அரசியலில் புதிய திருப்புமுனையாக நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, போட்டியிட்ட 21 சட்டசபைத் தொகுதிகள், 2 பார்லிமென்ட் தொகுதிகள் ஆகியவற்றில் வெற்றி பெற்றது.
ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு இன்னும் இரண்டு நாட்களில் முதல்வராகப் பதவியேற்க உள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிப்பு வந்த பின் டில்லி சென்ற பவன் கல்யாண், என்டிஏ கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டார். நேற்று பிரதமர் மோடி பதவியேற்பு விழாவிலும் மனைவியோடு கலந்து கொண்டார்.
ஆந்திர திரும்பிய பின் அடுத்த சில மாதங்களுக்கு அவர் தீவிர அரசியல் பணியாற்ற இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் ரீதியாக சில முக்கிய முடிவுகளையும் எடுக்க உள்ளாராம். அதனால், அடுத்த சில மாதங்களுக்கு தான் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகளைத் தள்ளி வைக்கத் திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள்.
தற்போது, “ஹரி ஹர வீரமல்லு, ஓஜி, உஸ்தாத் பகத்சிங்” ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார் பவன் கல்யாண்.