மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தெலுங்கில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான ஆர் டி எக்ஸ் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை பாயல் ராஜ்புத். பஞ்சாபி நடிகையான இவர் தொடர்ந்து தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தமிழில் கோல்மால் மற்றும் ஏஞ்சல் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கில் அவர் நடித்துள்ள ரக்ஷனா என்கிற படம் வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை பிரந்தீப் தாகூர் என்பவர் இயக்கியுள்ளதுடன் அவரே இந்த படத்தை தயாரித்தும் உள்ளார்.
கடந்த 2019-ல் துவங்கப்பட்ட இந்த படம் 2022ல் தயாராகி விட்டாலும் இப்போதுதான் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாயல் ராஜ்புத்திற்கு இருக்கும் புகழை பயன்படுத்தி இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்த தயாரிப்பாளர் திட்டமிட்டு இருந்தார். ஆனால் தனக்கு இன்னும் சம்பள பாக்கியை செட்டில் செய்யவில்லை என்றும் அது குறித்து கேட்டால் மோசமான வார்த்தைகளில் தன்னை திட்டி தெலுங்கு திரையுலகில் நடிக்க விடமாட்டேன் என்று மிரட்டல் விடுத்ததாகவும் கூறி தயாரிப்பாளர் மீது பரபரப்பான குற்றச்சாட்டை கூறியிருந்தார் பாயல் ராஜ்புத்.
இதனால் அவர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டார் என்பதுடன் படத்தை ரிலீஸ் செய்வதிலும் சிக்கல் எழுந்தது. இது குறித்து ஒரு பக்கம் பிரந்தீப் தாகூர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். பாயல் ராஜ்புத்தும் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு தயாரானார். இந்த நிலையில் திடீரென எதிர்பாராத டுவிஸ்ட்டாக இந்த பிரச்சனையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டுள்ளது. பாயல் ராஜபுத்துக்கு சேர வேண்டிய பாக்கி தொகையை செட்டில் பண்ணி விடுவதாக தயாரிப்பாளர் உறுதி அளித்துள்ளாராம். அதேசமயம் பாயல் ராஜ்புத் இந்த படத்தில் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வாரா என்பது இனிவரும் நாட்களில் தான் தெரிய வரும்.