ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி |

தெலுங்கில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான ஆர் டி எக்ஸ் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை பாயல் ராஜ்புத். பஞ்சாபி நடிகையான இவர் தொடர்ந்து தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தமிழில் கோல்மால் மற்றும் ஏஞ்சல் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கில் அவர் நடித்துள்ள ரக்ஷனா என்கிற படம் வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை பிரந்தீப் தாகூர் என்பவர் இயக்கியுள்ளதுடன் அவரே இந்த படத்தை தயாரித்தும் உள்ளார்.
கடந்த 2019-ல் துவங்கப்பட்ட இந்த படம் 2022ல் தயாராகி விட்டாலும் இப்போதுதான் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாயல் ராஜ்புத்திற்கு இருக்கும் புகழை பயன்படுத்தி இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்த தயாரிப்பாளர் திட்டமிட்டு இருந்தார். ஆனால் தனக்கு இன்னும் சம்பள பாக்கியை செட்டில் செய்யவில்லை என்றும் அது குறித்து கேட்டால் மோசமான வார்த்தைகளில் தன்னை திட்டி தெலுங்கு திரையுலகில் நடிக்க விடமாட்டேன் என்று மிரட்டல் விடுத்ததாகவும் கூறி தயாரிப்பாளர் மீது பரபரப்பான குற்றச்சாட்டை கூறியிருந்தார் பாயல் ராஜ்புத்.
இதனால் அவர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டார் என்பதுடன் படத்தை ரிலீஸ் செய்வதிலும் சிக்கல் எழுந்தது. இது குறித்து ஒரு பக்கம் பிரந்தீப் தாகூர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். பாயல் ராஜ்புத்தும் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு தயாரானார். இந்த நிலையில் திடீரென எதிர்பாராத டுவிஸ்ட்டாக இந்த பிரச்சனையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டுள்ளது. பாயல் ராஜபுத்துக்கு சேர வேண்டிய பாக்கி தொகையை செட்டில் பண்ணி விடுவதாக தயாரிப்பாளர் உறுதி அளித்துள்ளாராம். அதேசமயம் பாயல் ராஜ்புத் இந்த படத்தில் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வாரா என்பது இனிவரும் நாட்களில் தான் தெரிய வரும்.