சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
முன்னணி தெலுங்கு நடிகை பாயல் ராஜ்புத். 'ஆர்டிஎக்ஸ் 100', 'மங்களாவரம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடித்த 'ரக்ஷனா' என்ற படம் வருகிற ஜூன் 7ம் தேதி வெளி வருகிறது. துப்பறியும் திகில் கதையான இந்தப் படத்தில் பாயல் ராஜ்புத் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பிரன்தீப் தாகூர் என்பவர் தயாரித்து, இயக்கி உள்ளார்.
தற்போது இந்த படத்தின் புரமோசன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இவற்றில் பாயல் ராஜ்புத் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் தயாரிப்பாளர் குறித்து பாயல் ராஜ்புத் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். அதில் ‛‛ரக்ஷனா படத்திற்கு எனக்கு பேசியபடி சம்பளம் தரவில்லை. சம்பள பாக்கி வைத்திருக்கிறார்கள். அதை கேட்டால் தயாரிப்பாளர் உன்னை தெலுங்கு சினிமாவில் இருந்து விரட்டி விடுவேன் என்று மிரட்டுகிறார். நேரடியாகவும், ஆட்கள் மூலமாகவும் என்னை தரக்குறைவாக விமர்சித்து வருகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருக்கிறேன்” என்ற பாயல் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பாயல்ராஜ் புத்துக்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. "படத்தின் ப்ரொமோஷனுக்கு ஒத்துழைப்பு தர மறுப்பதாக 'ரக்ஷனா' படத்தின் தயாரிப்பாளர் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பேச்சுவார்த்தையில் பாயல் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வருகிறார். உண்மையில் அவருக்கு சம்பள பிரச்னை இருந்தால் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம். அதற்கு உரிய நடவடிக்கைகளை தயாரிப்பாளர் சங்கம் மேற்கொள்ளும். அதை விட்டுவிட்டு தயாரிப்பாளர் மிரட்டுவதாக கூறுவதும் படத்தின் புரமோஷன்களில் கலந்து கொள்ள மறுப்பதும் கண்டனத்துக்கு உரியது" என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.