'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்த பார்வதி நாயர் 'என்னை அறிந்தால்' படம் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், சீதக்காதி படங்களில் நடித்தார். தற்போது, ஆலம்பனா, ரூபம் மற்றும் விஜய் நடிக்கும் 'கோட்' படத்தில் நடித்து வருகிறார்.
சினிமாவில் குறைவாக நடித்தாலும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்து வருகிறார். அடிக்கடி கவர்ச்சி படங்களை வெளியிட்டு லட்சக்கணக்கில் பின் தொடர்பவர்களை வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அவர் எந்த பதிவையும் வெளியிடவில்லை. ரசிகர்களின் கமெண்டுகளுக்கும் பதில் அளிக்கவில்லை. ரசிகர்களும் அவருக்கு என்னாச்சு என்கிற ரீதியில் பல யூகங்களை வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில் தனது படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு “நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். நீங்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கும் அன்போடுகூடிய மெசேஜ்களுக்கும் நன்றி'' என்று கோபமாக பதிவிட்டுள்ளார்.
புதிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் துபாயில் உள்ள தனது குடும்பத்தினருடன் அவர் வசித்து வருவதாக கூறப்படுகிறது.