300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
'ஹனு மான்' படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகத்தில் 300 கோடிக்கும் அதிகமான வசூல் படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் பிரசாந்த் வர்மா. இந்த ஆண்டு தெலுங்கில் வந்த படங்களில் அதிக வசூலைக் குவித்த படம்.
பிரசாந்த் வர்மா அடுத்ததாக இப்படத்தின் அடுத்த பாகமான 'ஜெய் ஹனுமான்' படத்தை இயக்க உள்ளார். இதற்கடுத்து ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாகத் தகவல் வெளியானது. ஆனால், கடந்த சில வாரங்களாக அந்தப் படம் டிராப் ஆகிறது என்றும் சொல்லி வந்தார்கள்.
ஆனால், அதற்கெல்லாம் பிரசாந்த் வர்மா தரப்பில் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். படத்திற்கான கதை முழுமையாகத் தயாராக உள்ளதாம். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்.