புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
'கேஜிஎப்' படம் மூலம் பான் இந்தியா இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல். தற்போது 'சலார் 2' வேலைகளில் உள்ளார். இந்தப் படத்தை முடித்த பின் ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார்.
இந்தப் படத்திற்காக 'டிராகன்' என்ற தலைப்பை வைக்க முடிவு செய்தனர். ஆனால், ஹிந்தியில் அத்தலைப்பு இயக்குனர் கரண் ஜோஹர் வசம் இருந்தது. ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் வெளிவந்த 'பிரம்மாஸ்திரா' படத்திற்கு முதலில் 'டிராகன்' என்ற தலைப்பை வைக்க முடிவு செய்து அப்பெயரை பதிவு செய்து வைத்திருந்தனர்.
தற்போது ஜுனியர் என்டிஆர் படத்திற்காக அத்தலைப்பை அவரிடம் கேட்டதும், எந்தவிதமான தொகையும் பெற்றுக் கொள்ளாமல் அத்தலைப்பை விட்டுக் கொடுத்துவிட்டார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கனாதன் நடிக்கும் படத்திற்கும் 'டிராகன்' என்ற தலைப்பை அறிவித்துவிட்டார்கள். இத்தலைப்புக்கு ஜுனியர் என்டிஆர் படத்தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு தெரிவிக்குமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.