கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் புஷ்பா. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா 2 வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. புஷ்பா படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர்களில் படத்தின் எடிட்டர் ஆண்டனி ரூபனும் ஒருவர். இந்த நிலையில் இந்த இறுதி கட்டத்தில் புஷ்பா 2வில் இருந்து ஆண்டனி ரூபன் தற்போது விலகி உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி எடிட்டர்களில் ஒருவராக பல படங்களுக்கு பட தொகுப்பு செய்து வரும் ஆண்டனி ரூபன் ஏற்கனவே இங்கே ஒப்புக்கொண்ட படங்களில் பிசியாக பணியாற்றி வருவதால் புஷ்பா 2 படத்திற்கு தன்னால் தேதிகளை ஒதுக்க முடியவில்லை என்று கூறி இந்த படத்தில் இருந்து வெளியேறி உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த விஷயத்தை வெளியே பகிரங்கப்படுத்த விரும்பாத புஷ்பா 2 படக்குழு அவருக்கு பதிலாக குண்டூர் காரம். வீரசிம்ஹா ரெட்டி உள்ளிட்ட படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றிய நவீன் நூலியை வைத்து புஷ்பா 2 படத்தின் பணிகளை தொடர இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.