10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

நீண்ட இடைவெளிக்கு பின் ராமராஜன் நாயகனாக நடித்து திரைக்கு வரும் படம் ‛சாமானியன்'. ராகேஷ் இயக்க, இளையராஜா இசையமைத்துள்ளார். ராமராஜன் உடன் பயணிக்கு வேடங்களில் ராதாரவி, எம்எஸ் பாஸ்கர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ராமராஜன் அளித்த பேட்டி : ‛‛எல்லோருக்குள்ளும் இருக்கும் ஒரு கதை. சாதாரணமான ஒருத்தன் கோபப்பட்டால் என்னவாகும் என்பதால் இந்த தலைப்பு வைத்துள்ளோம். இதுவரை நான் நடித்திராத ஒரு கேரக்டர். படத்தில் எனக்கு ஜோடி கிடையாது. ராதாரவி, எம்எஸ் பாஸ்கர் தான் எனக்கு ஜோடி. இந்த கதைக்கு ஜோடியே தேவைப்படவில்லை. இந்த படத்தில் வரும் இடைவேளை மாதிரி வேறு எந்த படத்திலும் இதுவரை வந்தது இல்லை என்று சொல்லலாம். படத்தின் கதை என் காலகட்டத்திற்கு ஏற்ற கதையாகவும், அதே சமயம் இந்த கால கட்டத்துக்கு ஏற்ற கதையாகவும் இருக்கும்.
விபத்திற்கு பின் நான் உயிர் பிழைத்து வந்ததே ஆச்சர்யம் தான். இடையில் சினிமாவில் நடிக்காதது ஏன் என கேட்கிறார்கள். நான் சினிமாவை விட்டு ஒதுங்கவில்லை. என்னை அவர்கள் கூப்பிடவில்லை. இன்றைக்கு உள்ள சூழலுக்கு ஏற்றபடி இந்த கதை வந்ததால் இதில் நடித்தேன். கரகாட்டக்காரன் 2 வருமா என கேட்கிறார்கள். கங்கை அமரன் கூட கேட்டார். வேண்டாம் அண்ணே, அதில் ஆடியாச்சு, ஓடியாச்சு, முடிஞ்சு போச்சு அது சரியாக வராது என்று சொல்லிவிட்டேன். இப்படத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன். இரண்டு கதை எனக்கு பிடித்து இருக்கிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த அறிவிப்பு வெளிவரும்'' என்றார்.