''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது |
நீண்ட இடைவெளிக்கு பின் ராமராஜன் நாயகனாக நடித்து திரைக்கு வரும் படம் ‛சாமானியன்'. ராகேஷ் இயக்க, இளையராஜா இசையமைத்துள்ளார். ராமராஜன் உடன் பயணிக்கு வேடங்களில் ராதாரவி, எம்எஸ் பாஸ்கர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ராமராஜன் அளித்த பேட்டி : ‛‛எல்லோருக்குள்ளும் இருக்கும் ஒரு கதை. சாதாரணமான ஒருத்தன் கோபப்பட்டால் என்னவாகும் என்பதால் இந்த தலைப்பு வைத்துள்ளோம். இதுவரை நான் நடித்திராத ஒரு கேரக்டர். படத்தில் எனக்கு ஜோடி கிடையாது. ராதாரவி, எம்எஸ் பாஸ்கர் தான் எனக்கு ஜோடி. இந்த கதைக்கு ஜோடியே தேவைப்படவில்லை. இந்த படத்தில் வரும் இடைவேளை மாதிரி வேறு எந்த படத்திலும் இதுவரை வந்தது இல்லை என்று சொல்லலாம். படத்தின் கதை என் காலகட்டத்திற்கு ஏற்ற கதையாகவும், அதே சமயம் இந்த கால கட்டத்துக்கு ஏற்ற கதையாகவும் இருக்கும்.
விபத்திற்கு பின் நான் உயிர் பிழைத்து வந்ததே ஆச்சர்யம் தான். இடையில் சினிமாவில் நடிக்காதது ஏன் என கேட்கிறார்கள். நான் சினிமாவை விட்டு ஒதுங்கவில்லை. என்னை அவர்கள் கூப்பிடவில்லை. இன்றைக்கு உள்ள சூழலுக்கு ஏற்றபடி இந்த கதை வந்ததால் இதில் நடித்தேன். கரகாட்டக்காரன் 2 வருமா என கேட்கிறார்கள். கங்கை அமரன் கூட கேட்டார். வேண்டாம் அண்ணே, அதில் ஆடியாச்சு, ஓடியாச்சு, முடிஞ்சு போச்சு அது சரியாக வராது என்று சொல்லிவிட்டேன். இப்படத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன். இரண்டு கதை எனக்கு பிடித்து இருக்கிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த அறிவிப்பு வெளிவரும்'' என்றார்.