கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
வெளிநாட்டில் செட்டிலான பாடகியும், ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா தற்போது இந்தியா திரும்பி முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் குறித்து பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அதன் ஒரு பகுதியாக தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்றும் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கு விளக்கம் அளித்து கார்த்திக் குமார் ஒரு ஆடியோ வெளியிட்டார் அதி "நீ அசிங்கமாக பேசுகிறாய், இதெல்லாம் படிச்சவங்க பேசுற பேச்சு இல்ல. படிக்காத பட்டியலின பெண்கள் பேசுகிற மாதிரி நீ பேசுகிறாய். நீ ஏன் இந்த மாதிரி பேசுகிறாய். உன் வளர்ப்பு அப்படியில்லயே... உன் வளர்ப்பு நல்ல வளர்ப்புதானா, நல்ல ஆச்சாரமான பேமிலில இருந்துதான வந்த..." என்று பேசியிருந்தார். தற்போது இந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கார்திக்குமாரின் பேச்சு பட்டியலின பெண்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என்று அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை சைபர் கிரைம் போலீசுக்கு அனுப்பிய ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அந்த ஆடியோவில் இருப்பது எனது குரல் அல்ல. நான் ஒரு போதும் அப்படி பேசுபவன் அல்ல என்று கார்த்திக் குமார் கூறியுள்ளார். மேலும் இந்த பிரச்னை தொடர்பாக சென்னை மயிலாப்பூர் துணை ஆணையரிடம் அந்த ஆடியோவில் இருப்பது எனது குரல் அல்ல என புகார் மனு அளித்துள்ளார் கார்த்திக்.