நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... |

வெளிநாட்டில் செட்டிலான பாடகியும், ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா தற்போது இந்தியா திரும்பி முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் குறித்து பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அதன் ஒரு பகுதியாக தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்றும் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கு விளக்கம் அளித்து கார்த்திக் குமார் ஒரு ஆடியோ வெளியிட்டார் அதி "நீ அசிங்கமாக பேசுகிறாய், இதெல்லாம் படிச்சவங்க பேசுற பேச்சு இல்ல. படிக்காத பட்டியலின பெண்கள் பேசுகிற மாதிரி நீ பேசுகிறாய். நீ ஏன் இந்த மாதிரி பேசுகிறாய். உன் வளர்ப்பு அப்படியில்லயே... உன் வளர்ப்பு நல்ல வளர்ப்புதானா, நல்ல ஆச்சாரமான பேமிலில இருந்துதான வந்த..." என்று பேசியிருந்தார். தற்போது இந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கார்திக்குமாரின் பேச்சு பட்டியலின பெண்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என்று அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை சைபர் கிரைம் போலீசுக்கு அனுப்பிய ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அந்த ஆடியோவில் இருப்பது எனது குரல் அல்ல. நான் ஒரு போதும் அப்படி பேசுபவன் அல்ல என்று கார்த்திக் குமார் கூறியுள்ளார். மேலும் இந்த பிரச்னை தொடர்பாக சென்னை மயிலாப்பூர் துணை ஆணையரிடம் அந்த ஆடியோவில் இருப்பது எனது குரல் அல்ல என புகார் மனு அளித்துள்ளார் கார்த்திக்.