என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் |

ரஜினி தனது 170வது படமான 'வேட்டையன்' படப்பிடிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்பு முடித்தார். அடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி' படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த இரண்டு படங்களுக்கும் இடைப்பட்ட நேரத்தில் சில நாட்கள் அபுதாபியில் அவர் ஓய்வெடுக்க இருக்கிறார்.
இதற்காக நேற்று காலை சென்னை விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து காலை 11 மணியளவில் எத்தியாட் விமானம் மூலம் அபுதாபி புறப்பட்டு சென்றார். விமான நிலையத்திற்கு எப்போதும் போல உற்சாகமாக வந்தார். கருப்பு பேண்டும், வெள்ளை டிசர்ட்டும் அணிந்து எளிமையாக வந்த அவர், சுற்றி இருந்தவர்களை பார்த்து புன்னகை செய்தபடி சென்றார். தனக்கு உதவ வந்த விமான நிலைய ஊழியரின் தோள்மீது கைபோட்டபடி சென்றார்.
இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் தனது நண்பர்களுடன் சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.