பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
ரஜினி தனது 170வது படமான 'வேட்டையன்' படப்பிடிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்பு முடித்தார். அடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி' படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த இரண்டு படங்களுக்கும் இடைப்பட்ட நேரத்தில் சில நாட்கள் அபுதாபியில் அவர் ஓய்வெடுக்க இருக்கிறார்.
இதற்காக நேற்று காலை சென்னை விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து காலை 11 மணியளவில் எத்தியாட் விமானம் மூலம் அபுதாபி புறப்பட்டு சென்றார். விமான நிலையத்திற்கு எப்போதும் போல உற்சாகமாக வந்தார். கருப்பு பேண்டும், வெள்ளை டிசர்ட்டும் அணிந்து எளிமையாக வந்த அவர், சுற்றி இருந்தவர்களை பார்த்து புன்னகை செய்தபடி சென்றார். தனக்கு உதவ வந்த விமான நிலைய ஊழியரின் தோள்மீது கைபோட்டபடி சென்றார்.
இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் தனது நண்பர்களுடன் சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.