'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
இசை அமைப்பாளர் இளையராஜா மீது தற்போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பாடல்களுக்கு உரிமை கேட்டு வீண் பிரச்னை கிளப்புகிறா என விமர்னங்கள் வந்து கொண்டிருக்கம் நிலையில் நேற்று திடீரென ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர் பேசியிருப்பதாவது:
தினமும் என்னை பற்றி ஏதோ ஒரு வகையில் வீடியோக்கள் வந்துகொண்டிருப்பதாக வேண்டியவர்கள் வந்து சொல்வார்கள். நான் இதிலெல்லாம் கவனம் செலுத்துவது இல்லை. ஏனெனில் மற்றவர்களை கவனிப்பது என் வேலையில்லை. நான் என் வழியில் ரொம்ப சுத்தமாக போய்க் கொண்டு இருக்கிறேன். நீங்கள் என்னை வாழ்த்தி கொண்டிருக்கும் நேரத்தில், கடந்த ஒரு மாதத்தில் ஒரு சிம்பொனியை எழுதி முடித்து விட்டேன். இங்கே பாடல்களை முடித்துவிட்டு, இடையே சில இடங்களுக்கும், விழாக்களுக்கும் தலைகாட்டி கொண்டிருக்கிறேன்.
ஒரு சிம்பொனியை 35 நாட்களில் முழுவதுமாக எழுதி முடித்திருக்கிறேன். இது எனக்கு சந்தோஷமான செய்தி. அதை உங்களுக்கு சொல்லி கொள்கிறேன். ஏனெனில் படத்துக்கான இசை வேறு. பின்னணி இசை வேறு. இதெல்லாம் பிரதிபலித்தால் அது சிம்பொனி ஆகாது. எனவே ஒரு சுத்தமான சிம்பொனியாக எழுதி முடித்திருக்கிறேன். உற்சாகமான இந்த செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் இளையராஜா கூறியுள்ளார்.