நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

திமுக நிர்வாகியும் பேச்சாளருமான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பலமுறை சர்ச்சை கருத்துகளால் சிக்கலில் மாட்டிக்கொள்பவர். நடிகை குஷ்பு குறித்த சர்ச்சை பேச்சுக்காக கைது செய்யப்பட்டிருந்தார். லோக்சபா தேர்தலின்போது பிரசார மேடையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, நடிகையும், பா.ஜ., வேட்பாளருமான ராதிகா சரத்குமார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ தற்போது வைரலான நிலையில் சமூக வலைதளத்தில் ராதிகா தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராதிகா சரத்குமார் தரப்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.