பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் |
மலையாளத்தில் பாசில் இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா, சுரேஷ் கோபி உள்ளிட்ட பலரது நடிப்பில் 1993ம் ஆண்டு வெளியான படம் மணிசித்திரதாழு. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திரைக்கு வந்த இந்த படம் அப்போது 7 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இந்த படத்தை தான் பின்னர் கன்னடத்தில் ஆப்தமித்ரா, தமிழில் சந்திரமுகி என்ற பெயரில் ரீமேக் செய்தார் பி. வாசு.
தமிழில் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா நடித்த சந்திரமுகி படம் சென்னையில் மட்டும் ஓராண்டு ஓடி வசூல் சாதனை செய்தது. இந்த நிலையில் தற்போது மணிசித்திரதாழு படம் குறித்து போஸ்டருடன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். அதில், ‛மணிசித்திரதாழு படத்தை கிட்டத்தட்ட 50 முறை பார்த்திருக்கிறேன். இயக்குனர் பாசில் அவர்களின் கிளாசிக் படம் இது. ஷோபனா சிறப்பாக நடித்து தேசிய விருது வாங்கினார். மோகன்லால் அவர்களால் இந்த தேசத்துக்கே பெருமை' என்று பதிவிட்டு இருக்கிறார் செல்வராகவன்.