காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
மலையாளத்தில் பாசில் இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா, சுரேஷ் கோபி உள்ளிட்ட பலரது நடிப்பில் 1993ம் ஆண்டு வெளியான படம் மணிசித்திரதாழு. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திரைக்கு வந்த இந்த படம் அப்போது 7 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இந்த படத்தை தான் பின்னர் கன்னடத்தில் ஆப்தமித்ரா, தமிழில் சந்திரமுகி என்ற பெயரில் ரீமேக் செய்தார் பி. வாசு.
தமிழில் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா நடித்த சந்திரமுகி படம் சென்னையில் மட்டும் ஓராண்டு ஓடி வசூல் சாதனை செய்தது. இந்த நிலையில் தற்போது மணிசித்திரதாழு படம் குறித்து போஸ்டருடன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். அதில், ‛மணிசித்திரதாழு படத்தை கிட்டத்தட்ட 50 முறை பார்த்திருக்கிறேன். இயக்குனர் பாசில் அவர்களின் கிளாசிக் படம் இது. ஷோபனா சிறப்பாக நடித்து தேசிய விருது வாங்கினார். மோகன்லால் அவர்களால் இந்த தேசத்துக்கே பெருமை' என்று பதிவிட்டு இருக்கிறார் செல்வராகவன்.