பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கடந்த 2019ம் ஆண்டு ஆதித்ய வர்மா என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு விக்ரமுடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்தார். இந்நிலையில் தற்போது அவர் கபடி விளையாட்டை மையமாக கொண்டு மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். தற்போது இந்த படம் குறித்த ஒரு அப்டேட்டை நடிகர் விக்ரம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், வருகிறான் என்ற வாசகத்தை குறிப்பிட்டு ஒரு போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார். அதோடு, நாளைய தினம் இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.