இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

மலையாள சினிமாவில் சமீபத்தில் அறிமுகமான ஆதியா பிரசாத் தமிழுக்கு வருகிறார். குஞ்சாகோ போபன் நடித்த 'நிழல்' படத்தின் மூலம் பிரபலமான ஆதியா, அங்கு ஒரு சில படங்களில் நடித்த நிலையில் தமிழுக்கு அறிமுகமாகிறார். 'ஜோஸ்வா இமை போல் காக்க' படத்தில் வில்லனாக நடித்த கிருஷ்ணா மீண்டும் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்த படத்தை ஈவீஈஜி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நஞ்சுண்டப்பா ரெட்டி தயாரிக்கிறார். படத்திற்கு தற்காலிகமாக 'புரொடக்ஷன் நம்பர் 1' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த திரைப்படம் காமெடி, பேண்டஸி மற்றும் திகில் ஜானரில் உருவாக இருக்கிறது. இயக்குநர் ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ள துரை சரவணன் இயக்குகிறார்.
புதுமுக நடிகராக சந்தோஷ் வில்லனாக அறிமுகமாகிறார். இவர்களோடு மாறன், இமான் அண்ணாச்சி, ஆதித்யா கதிர், சாம்ஸ், இயக்குநர் ஏ.வெங்கடேஷ் மற்றும் பலர் நடிக்க உள்ளனர். எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது.