சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
கடந்த 30 வருடங்களாக தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனராக, குறிப்பாக நகைச்சுவை படங்களை இயக்குவதில் வல்லவராக வலம் வருபவர் இயக்குனர் சுந்தர்.சி. இவர் எடுத்து வரும் அரண்மனை படத்தின் அடுத்தடுத்த பாகங்களுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் அரண்மனை படத்தின் நான்காம் பாகம் வரும் மே மூன்றாம் தேதி வெளியாக இருக்கிறது. இதையடுத்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் சுந்தர் சி. அப்படி ஒரு நிகழ்வில் இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத ஒரு தகவலை சொல்கிறேன் என தனது மனைவி குஷ்பு பற்றிய தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார் சுந்தர்.சி.
அதாவது குஷ்பு நடிகையாக இருந்தபோது இயக்குனர் சுந்தர் சியும் அவரும் இருவரும் ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். “நாங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்த சமயத்தில் குஷ்பு உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் உங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டார். இது குறித்து என்னிடம் புலம்பிய குஷ்பு நீங்கள் வேறு யாராவது நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூட கூறினார். அதன்பின்னர் நாங்கள் இருவருமே நமக்கு திருமணம் ஆனால் குழந்தை பிறக்காது, நமக்கு நாம்தான் குழந்தை என மனதளவில் தயாராகி விட்டோம். ஆனால் திருமணமானபின் ஆண்டவனின் எண்ணம் வேறாக இருந்தது. ஒன்றுக்கு இரண்டாக அழகான பெண் குழந்தைகள் பிறந்தன” என்று கூறியுள்ளார்.