எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
'தங்கலான்' படத்திற்குப் பிறகு விக்ரம் நடிக்கும் 62வது படத்திற்கு 'வீர தீர சூரன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. “பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா” ஆகிய படங்களை இயக்கிய எஸ்யு அருண்குமார் இப்படத்தை இயக்குகிறார்.
கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார். மலையாள நடிகர்களான சுராச் வெஞ்சரமூடு, சித்திக் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகி உள்ளது. இது குறித்து விக்ரம் மேலாளர் சூர்யநாராயணன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “வீர தீர சூரன்' படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக, மிக, மிக அதிகமாக உள்ளது. இன்று அனைவரின் நல்லாசியுடன் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு துவக்கம். அவர்களின் எதிர்பார்ப்பைவிட பன் மடங்கு 'வீர தீர சூரன்' பூர்த்தி செய்து, மிகப் பெரிய வெற்றி பெற்று வரலாறு படைக்கும் என்பதில் உறுதியுடன், இறைவனின் ஆசியுடன் நல்வாழ்த்துக்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.