மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
'தங்கலான்' படத்திற்குப் பிறகு விக்ரம் நடிக்கும் 62வது படத்திற்கு 'வீர தீர சூரன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. “பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா” ஆகிய படங்களை இயக்கிய எஸ்யு அருண்குமார் இப்படத்தை இயக்குகிறார்.
கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார். மலையாள நடிகர்களான சுராச் வெஞ்சரமூடு, சித்திக் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகி உள்ளது. இது குறித்து விக்ரம் மேலாளர் சூர்யநாராயணன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “வீர தீர சூரன்' படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக, மிக, மிக அதிகமாக உள்ளது. இன்று அனைவரின் நல்லாசியுடன் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு துவக்கம். அவர்களின் எதிர்பார்ப்பைவிட பன் மடங்கு 'வீர தீர சூரன்' பூர்த்தி செய்து, மிகப் பெரிய வெற்றி பெற்று வரலாறு படைக்கும் என்பதில் உறுதியுடன், இறைவனின் ஆசியுடன் நல்வாழ்த்துக்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.