அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
பாரதி கண்ணம்மா, பொற்காலம், பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் சேரன். சொல்ல மறந்த கதை உள்ளிட்ட பல படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார். கடைசியாக தம்பி ராமையா மகன் உமாபதியை ஹீரோவாக வைத்து திருமணம் என்ற படத்தை இயக்கிய சேரன், பிக்பாஸ்- 3 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
இந்த நிலையில் சேரனின் மூத்த மகளான நிவேதா பிரியதர்ஷினிக்கும், சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை இயக்குனர்கள் பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், சீமான் ஆகியோர் முன்னின்று நடத்தியுள்ளனர். இதில் ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
இதுதொடர்பான போட்டோக்களை பகிர்ந்து திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கும், திருமணத்தை சிறப்பாக நடத்தி கொடுத்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் சேரன்.