இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தேர்தல் நாள் என்பதால் ரஷ்யாவில் இருந்து மும்பை வந்து அங்கிருந்து சென்னை வந்துள்ளார் விஜய். சென்னை வந்தவுடனே முதல் வேலையாக நீலாங்கரையில் உள்ள வேல்ஸ் பள்ளியில் அவர் ஓட்டளித்தார். விஜய் ஓட்டுச்சாவடிக்கு வந்தபோது ரசிகர்கள் கூட்டம் படையெடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி விஜய்யை ஓட்டளிக்க அழைத்து சென்றார்கள். அப்போது விஜய்யின் கையில் காயம் ஏற்பட்டிருப்பதை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அது குறித்து விஜய் வட்டாரத்தில் விசாரித்தபோது ரஷ்யாவில் நடைபெற்று வரும் கோட் படப்பிடிப்பில் பைக் சேசிங் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும், அப்போது விஜய்யின் தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டதாகவும் விஜய் தரப்பில் தெரிவித்தார்கள்.
ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள்
தமிழக வெற்றிக் கழகம் தலைவராக விஜய் வெளியிட்ட பதிவில், ‛‛நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.