தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? | பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு விஜய்சேதுபதி பதில் | '3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? |
சுந்தர் சி இயக்கி, கதாநாயகனாக நடிக்க, தமன்னா, ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்க உருவாகியுள்ள படம் 'அரண்மனை 4'. இப்படத்தின் வெளியீடு ஏப்ரல் 26 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென வெளியீட்டை மே 3ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்கள்.
சில தினங்களுக்கு முன்பு படங்களை தள்ளி வைக்கச் சொல்கிறார்கள் என ரெட் ஜெயன்ட் நிறுவனம் மீது நடிகர் விஷால் குற்றம் சாட்டியிருந்தார். அவர் நடித்துள்ள 'ரத்னம்' படம் ஏப்ரல் 26ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்திற்கும் என்ன நடக்கும் என்று தெரியாது என அவர் கூறியிருந்தார்.
'அரண்மனை 4' படத்தை கம்பெனி பெயர் இல்லாமல் ரெட் ஜெயன்ட் நிறுவனம்தான் வெளியிடுகிறது என்பது கோலிவுட் தகவல். நேற்று நடந்த 'ரத்னம்' பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூட விஷாலிடம் நீங்கள்தான் தள்ளி வைக்கச் சொன்னீர்களா என்று கேட்ட போது பதறினார்.
“நான் அப்படி எதுவும் சொல்ல மாட்டேன், சிறிய படங்கள் கூட ஓட வேண்டும் என்பது எனது ஆசை. 'அரண்மனை 4' தள்ளிப் போக வேறு ஏதோ காரணம் இருக்கலாம். சுந்தர் சி சார் எனது அண்ணன் போன்றவர்,” என்றார்.