மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ் சினிமா எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஆரம்ப கட்டத்தில் தவித்து வருகிறது. இந்த வருடத்தின் மூன்றாவது வாரம் முடிய இன்னும் ஒரு வாரம்தான் உள்ளது. ஆனாலும், இதுவரையில் லாபகரமான வெற்றி என எந்த ஒரு படத்தையும் சொல்ல முடியவில்லை.
நேற்று கூட ஜிவி பிரகாஷ்குமார் நடித்த 'ரெபல்' படம் வெளிவந்தது. அப்படத்திற்கும் கூட ரசிகர்கள் பெரிய அளவில் ஆதரவு தரவில்லை. நேற்றுமுன்தினம் தான் இந்த ஆண்டிற்கான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகின. முதல் போட்டியே சென்னையில் நடந்தது. அதுவும் சென்னை அணிக்கும், பெங்களூரு அணிக்குமான போட்டி. அதனால், நேற்றுமுன்தினம் மாலையிலிருந்தே தமிழக கிரிக்கெட் ரசிகர்களை ஜுரம் பற்றிக் கொண்டது.
ஏற்கெனவே முழு ஆண்டுத் தேர்வுகளாலும் தியேட்டர்கள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. இப்போது பிரீமியர் லீக் போட்டியும், சில தினங்களுக்கு முன்பாகவே தேர்தல் பிரச்சாரமும் ஆரம்பமாகிவிட்டது. அதனால், தியேட்டர்களில் கூட்டம் மேலும் குறைய ஆரம்பித்துள்ளது. இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்றாலும் பத்து சதவீதம் கூட தியேட்டர்களில் முன்பதிவு செய்யப்படவில்லை.
கிரிக்கெட், தேர்தல் முடிந்த பின்புதான் மக்கள் சினிமா பக்கம் திரும்புவார்கள். அதுவரையில் தள்ளாட்டம், திண்டாட்டம்தான் இருக்கும்.